இலக்கியங்களில் சமூக விழுமியம் (தொல்காப்பிய இலக்கணம்)
************************************************
பெண்ணின் பெற்றோரும் ஆண்மகனின் பெற்றோரும் ஒருவரோடொருவர் கலந்து பேசி உற்றாரும் ஊராரும் எனப்பேசி பலபேர் அறிய இரு வீட்டாரும் இணைந்து ஏற்படுத்திக் கொள்ளும் திருமணமே சமூக ஒப்புதலுடன் கூடியது என பொதுவாக ஏற்கப்பட்டுள்ளது.
************************************************
பெண்ணின் பெற்றோரும் ஆண்மகனின் பெற்றோரும் ஒருவரோடொருவர் கலந்து பேசி உற்றாரும் ஊராரும் எனப்பேசி பலபேர் அறிய இரு வீட்டாரும் இணைந்து ஏற்படுத்திக் கொள்ளும் திருமணமே சமூக ஒப்புதலுடன் கூடியது என பொதுவாக ஏற்கப்பட்டுள்ளது.
“ கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினர் கொடுப்பக் கொள்வதுவே “
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினர் கொடுப்பக் கொள்வதுவே “
எனத் தொல்காப்பியர் இத்திருமண முறையினையே எடுத்துக் காட்டுகிறார்.
இங்கு ‘கொளற்குரி மரபினர்’, ‘கொடைக்குரி மரபினர்’ என்பது முறையே ஆணின் பெற்றோரரையும், பெண்ணின் பெற்றோரரையும் குறிக்கிறது என நச்சினார்க்கினியார் பொருள் உரைக்கிறார்.
அத்துடன் பெற்றோர் அறியா வண்ணம் பெண் ஆணுடன் செல்லுதல் சாதாரணமாக நிகழ்ந்ததனால், காலப்போக்கில் தான் விரும்பிக் கரம்பிடித்த பெண்ணையேயே விட்டு வேற்றாளை நாடிய நிலைகள் அதிகரிக்கலாயின. இதனாலேயே ஊரறிய சமூகத்தவரறிய திருமணம் இடம்பெறல் வேண்டும் என்பதன் அவசியம் எடுத்துக் காட்டப்பட்டது. இதனையே தொல்காப்பியர்,
‘கொடுப்போர் இன்றிக் கரணமுண்டே
புணர்ந்துடன் போகிய காலையானை…’ (கற்பியல் 2) என்றும்
புணர்ந்துடன் போகிய காலையானை…’ (கற்பியல் 2) என்றும்
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணமென்ப....(கற்பியல் 4) என்றும் கூறுகிறார்.
இதனூடே பொய், களவு முதலான இழி செயல்கள் தோன்றியதனாலே சான்றோர் அறிய சாட்சிகளுடன் திருமணம் இடம்பெற வேண்டும் என தொல்காப்பியர் கூறுகிறார்......
ஐயர் யாத்தனர் கரணமென்ப....(கற்பியல் 4) என்றும் கூறுகிறார்.
இதனூடே பொய், களவு முதலான இழி செயல்கள் தோன்றியதனாலே சான்றோர் அறிய சாட்சிகளுடன் திருமணம் இடம்பெற வேண்டும் என தொல்காப்பியர் கூறுகிறார்......
(சங்க கால அகவாழ்வும் இல்லற மாண்பும் எனும் எந்தாய்வுக் கட்டுரையிலிருந்து...)
கருத்துகள்
கருத்துரையிடுக